தவளையை கடைசியாக எங்கு எப்போது பார்த்தீர்கள்.?
இப்போது பார்த்தால் போட்டோ எடுத்து #FrogChallenge என்று சமூக வலைதளத்தில் பதிவிடவும்.!
இன்றைக்குக் கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இன்னும்கூட நம்மால் அதில் வெற்றியடைய முடியவில்லை. ஆனால், இந்தப் பணியை நமக்காகக் காலங்காலமாக இலவசமாகவே செய்து வந்தவை தவளைகள்.
உலகம் முழுவதும் பலவகையான தவளை இனங்கள் இருக்கின்றன. இவை உயிர்ச்சங்கிலியில் மிக முக்கியமான அங்கம். ஆனால், பல்வேறு செயல்பாடுகளால் இன்றைக்கு அந்த உயிர்ச்சங்கிலி உடைந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. தவளைகளின் அழிவும் உயிர்ச்சங்கிலி உடைந்ததற்கு முக்கியமான காரணம். இந்தப் பூமியில் ஒரு செல் உயிரியான அமீபா முதல் யானை வரை அனைத்தும் தேவையின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. தேவையற்றது என எதுவுமே இல்லை. அனைத்து உயிர்களும் தேவைக்கு ஏற்ற அளவில் இருப்பதுதான் உயிரியல் சமநிலை. ஆனால், தற்போது பல உயிரினங்கள் அழிந்தும், குறைவான எண்ணிக்கையிலும் இருப்பதால் உயிரியல் சமநிலை சிதிலமடைந்து கிடக்கிறது.
தவளைகளின் அழிவால் மனித இனம் இன்றைக்குப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. கோடிக்கணக்கில் செலவழித்தாலும், இன்றைக்கும் கொசுக்களை ஒழிக்க நம்மால் முடியவில்லை. இந்தக் கொசுக்கள் மூலமாகப் பல்வேறு விதமான நோய் பாதிப்புக்குத் தொடர்ந்து ஆளாகி வருகிறோம். ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் கொசுக்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தன தவளைகள். கொசுக்கள் நீர்நிலைகளில்தாம் முட்டையிடும். அந்த நீர்நிலைகளில் உள்ள தவளைக்கு (தலைப்பிரட்டை) இந்த முட்டைகள்தாம் பிரியாணி. லட்சக்கணக்கான முட்டைகளை இந்தத் தலைப்பிரட்டைகள் அழித்து வந்தன. ஆனால், நீர்நிலைகளில் சாக்கடை கலந்தது, தவளைகள் வசிக்கத் தோதான இடங்கள் இல்லாமல் போனது போன்ற பல்வேறு காரணங்களால் தவளைகளும், தலைப்பிரட்டைகளும் அழிந்து வருகின்றன. இதனால் கொசுக்களின் கொட்டம் அதிகமாகி வருகிறது.
இப்படி இயற்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமான தவளையைக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தவும், மக்களிடம் இதுதொடர்பாக விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை 'தவளையைக் காக்கும் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது..
பெயரளவில் மட்டுமே 😭
#AramSeiThamizha அறம் செய் தமிழா

No comments:
Post a Comment