Thursday, 31 December 2020

ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா "2021 இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய அளவிலான போட்டி" முடிவுகள் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா இணையதளத்தில் வெளியீடு.

 ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா "2021 இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய அளவிலான போட்டி" முடிவுகள் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா இணையதளத்தில் வெளியீடு.

https://www.spacekidzindia.in/ysi-20-21

 






Wednesday, 30 December 2020

விருதுநகர் மாவட்டம் , தலைமையாசிரியர் கூட்டம்- கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி- பெண் குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சி சார்பாக.

 விருதுநகர் மாவட்டம் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டமானது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பெண்குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சி சார்பாக 04.01.2021 அன்று காலை 10.00 - 12.00 அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாலை 2.00- 4.00 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது. மேலும் விவரஙகளுக்கு கீழுள்ள இணைப்பினைக் காணவும்.

 



வரையறுக்கப்பட்ட விடுப்பு விவரம் 2021

 வரையறுக்கப்பட்ட விடுப்பு விவரம் 2021 



Monday, 28 December 2020

A4 காகிதம் என்றால் நமக்கு தெரியும். A0,A1,A2,A3,... என்றால் தெரியுமா?A4 காகிதம் அளவு என்ன? எவ்வாறு A4 என பெயர் வந்தது? வாங்க பார்க்கலாம் !

 *அறிந்து கொள்வோம்..*


A4 பேப்பர், 

A5 ஐ விட பெரியது. 

A3 பேப்பர் 

இவை இரண்டையும் விட பெரியது. 

எப்படி கணக்கிடுகிறார்கள்? 


A என்று வகைப்படுத்தப்பட்ட பேப்பர் size களில் முதல் பெரிய 

size A0. 

தொடர்ந்து A1,A2, A3, A4…..A8 என்று செல்ல செல்ல அதன் size குறையும்.


ஒரு A0 paper ஐ இரண்டாக வெட்டினால் 

இரண்டு A1 paper கிடைக்கும்.


ஒரு A1 paper ஐ இரண்டாக வெட்டினால் 

இரண்டு A2 paper கிடைக்கும்.


ஒரு A2 paper ஐ இரண்டாக வெட்டினால் 

இரண்டு A3 paper கிடைக்கும்.


ஒரு A3 ஐ இரண்டாக வெட்டினால் இரண்டு A4 கிடைக்கும்.


தொடர்ந்து வெட்ட வெட்ட அடுத்தடுத்த size கிடைக்கும்.


மிகச் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் முழு ஆப்பிள் பழத்தை 

A0 ஆக நினைத்து கொள்ளுங்கள்.


இரண்டாக சம அளவில் வெட்டினால் இரண்டு A1 கிடைக்கும்.


ஒரு A1 piece ஐ சம அளவில் வெட்டினால் இரண்டு A2 கிடைக்கும்.


Paper Size Width x Length (mm)


A0 841mm X 1189mm


A1 594mm X 841mm


A2 420mm X 594mm


A3 297mm X 420mm


A4 210mm X 297mm


A5 148mm X 210mm


A6 105mm X 148mm


A7 74mm X 105mm


A8 52mm X 74mm


Width

 ( அகலம் ) 


அடுத்தடுத்த size களின் length ஆக வரும்.


Length ( நீளம் ) ன் பாதி அடுத்தடுத்த size களின் width ஆக வரும்.

நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் ந்டத்தப்படும் கல்விஅமைச்சர் அறிவிப்பு!

 நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் ந்டத்தப்படும்  கல்விஅமைச்சர் அறிவிப்பு!



Sunday, 27 December 2020

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீன், வடிவமைத்துள்ள, எடை குறைந்த செயற்கைகோள்களை, 2021-ல் #NASA விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது!

 தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீன், வடிவமைத்துள்ள, எடை குறைந்த செயற்கைகோள்களை,  2021-ல் #NASA விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவன் ரியாஸ்தீன், ஊக்கமளித்த பெற்றோர், ஆசிரியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் - பாராட்டுகள்.


Saturday, 26 December 2020

பத்தாம் வகுப்பு கணிதம் அனைத்து கணக்குகளும் வீடியோ வடிவில் !

https://drive.google.com/file/d/16RE1zGkRI6zTZJW0Hv0Le-cKd8OfQ6Pj/view?usp=drivesdk 

பத்தாம் வகுப்பு கணிதம்  அனைத்து கணக்குகளும் வீடியோ வடிவில் !

https://drive.google.com/file/d/16RE1zGkRI6zTZJW0Hv0Le-cKd8OfQ6Pj/view?usp=drivesdk


இந்த கல்வி ஆண்டு பூஜ்ய கல்வி ஆண்டா? பூஜ்ய கல்வி ஆண்டு என்றால் என்ன?

 இந்த ஆண்டு பள்ளிகள் திறக்காத நிலையில் இந்த ஆண்டைப் பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனதக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

கொரோனா சூழலால் தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. உருமாற்றம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருவதால் இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படுமா என்னும் ஐயம் உள்ளது. பள்ளிகள் திறக்காத நிலையில், அந்தந்த வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகளை அடையாமல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றினால் கல்வித் தரம் பாதிக்கப்படும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

அதன்படி இந்தக் கல்வியாண்டை முற்றிலும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு எனப்படுகிறது. அவ்வாறு பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்பட்டால் கடந்த 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் படித்த மாணவர்கள், இந்த ஆண்டில் எந்த வகுப்பும் படித்ததாகக் கருதப்படாது. அவர்கள் அடுத்த 2021 - 2022 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்புக்குத் தான் செல்வார்கள்.

அதேபோல் இந்தக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள், அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டியவர்கள் என ஒன்றாம் வகுப்பில் மட்டும் வழக்கத்தை விட இருமடங்கு மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் சூழல் உருவாகும். ஆனால் பூஜ்யம் கல்வி ஆண்டு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு தற்போது வரை முடிவெடுக்கவில்லை.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு. அமைச்சர் புதிய அறிவிப்பு.!!!

 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்வது பற்றியும் முதல்வரிடம் கலந்தாலோசிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.


இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கொரோனா பரவும் சூழல் உருவாகி உள்ளதால், பள்ளிகள் திறப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்படுமா இல்லையா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா என்பது குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தாய்லாந்து மற்றும் அரையாண்டுதேர்வு வைத்து பெயர்ச்சி அறிவிக்கப்பட்டாலும் இந்த ஆண்டு நிலமை வேறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

DailyhuntReport
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithisolai

Friday, 25 December 2020

Inspire Award 2020-21 தமிழகம் முழுவதும் இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வான மாணவ மாணவியர் பட்டியல்!

 Inspire Award 2020-21 தமிழகம் முழுவதும் இன்ஸ்பயர் விருதுக்கு  தேர்வான மாணவ மாணவியர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் மொத்தம் 1371 மாணவ மாணவர் தேர்வு செய்யப்படு உள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 47 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

https://drive.google.com/file/d/165J9kistVejjabndflMpc4iOomoxuUWL/view?usp=drivesdk


Thursday, 24 December 2020

Inspire Award 2020-21 விருதுநகர் மாவட்டத்தில் 47 மாணவ மாணவிகளின் செயல்திட்டம் தேர்வு!




 மத்திய அரசானது மாணவ மாணவியர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையினை பள்ளிப்பருவத்திலேயே வளர்த்திடும் பொருட்டு 2010 கல்வி ஆண்டு முதல் இன்ஸ்பயர் விருது என்னும் தேசிய அறிவியல் போட்டியை வருடந்தோரும் நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கு மாணவர்களின் செயல்திட்ட மாதிரி திட்டத்தினை பள்ளி வழியாக இணையம் மூலம் பதிவு செய்திட வேண்டும். அதில் சிறந்த செயல்திட்டத்தினை மத்திய அரசு மாவட்ட வாரியாக தேர்வு செய்கிறது. தேர்வு செய்யப்பட்ட செயல்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10,000 வழஙகுகிறது. அத்தொகையில் தனது மாதிரி செயல்திட்டத்தினை செயல்திட்டமாக மாற்றி மவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலும் அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். இந்த ஆண்டு கலாம்  ஆகலாம் என்ற அறிவியல் கழகம் மூலம் இன்ஸ்பயர் விருதுக்கான பயிற்சி முகாம் இணைய வழியில் நடைபெற்றது. இதனால் பல மாணவர்கள் பயனடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 47 மாணவ மாணவிகள் இன்ஸ்பயர் விருதுக்குத் தேர்வாகி உள்ளனர்.

Wednesday, 23 December 2020

Post Matric Scholarship - கல்வி உதவித்தொகை ஐந்து மடங்கு உயர்வு!

 பத்தாம் வகுப்பிற்குப்பின் கல்வியைத் தொடர்வதற்காக வழங்கப்படும் உதவித்தொகையை ஐந்து மடங்காக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நான்கு கோடிக்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-:நன்றி தினமலர்.


Tuesday, 22 December 2020

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!

 தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் பள்ளிகள் திறப்பதில் சிக்கல்!

- நன்றி தினமலர்



NTSE EXAM HALL TICKET RELEASED! DOWNLOAD IT.

 NTSE  EXAM HALL TICKET RELEASED! DOWNLOAD it.


Download hall ticket from the below link

http://www.dge.tn.gov.in/





Monday, 21 December 2020

டிசம்பர் 22: கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று...

 டிசம்பர் 22: கணித மேதை சீனிவாச ராமானுஜன் பிறந்த தினம் இன்று...



அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்

*அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது*

 

*அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்.  இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்.*


*ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.*


*22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். இது 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.*

வியாழன் மற்றும் சனிக்கோள் பேரிணைவு நேரலை

இன்று மாலை 6 மணிக்கு வியாழன் மற்றும் சனிக்கோள் பேரிணைவு நேரலை திருச்சியிலிருந்து ஜூம் வாயிலாக வழங்க இருக்கிறோம், இந்த பேரிணைவு குறித்த விவரங்களை திரு. பாலா பாரதி அவர்கள் நமக்கு வழங்க இருக்கிறார். அவசியம் அனைவரும் கலந்து கொள்ளவும். இருந்து இணைப்பில் வர இயலாதவர்கள் அறிவியல் பலகையின் யூடியூப் பக்கத்தில் நேரலையாக காணலாம். நன்றி. ஜூம் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. நன்றி. அறிவியல் பலகை.


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88693923808?pwd=UjJReWpuVUlxa1NvR1JCTlJFR3MxQT09


Meeting ID: 886 9392 3808

Passcode: 774772

Sunday, 20 December 2020

அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு-

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு-https://drive.google.com/file/d/15GTI5rZN_As6-7a1jPCsvUdAczAP4cqm/view?usp=drivesdk 

Saturday, 19 December 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு!


*அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு அகவிலைபடி உயர்வு :*


மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் திட்டமிட்டது.அதற்காக மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டதால் நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றம் ஒய்வூதிய தாரர்களுக்காக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை வரை அந்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.எனவே பழையபடி 17 சதவீத அகவிலைபடி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.இதனால் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 60 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு முதல் அகவிலைபடியை 17 சதவீதத்தில் இருந்த 21 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அரசு ஊழியர்களும் , ஒய்வூதியதாரர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Thursday, 17 December 2020

School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

 TNTP Website அல்லாது Diksha மூலமாகவும்‌ பயிற்சியில்‌ கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌


To all Primary, middle, high  higher secondary school Headmasters,


A message from our state  officials, 


School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.diksha.app


இந்த பயிற்ச்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ  click செய்து தெரிந்து கொள்ளலாம்.

 

https://bit.ly/37rY0uw



🔑🗝  *Safety & Security training key answers*

https://bit.ly/2IWpYoz

*School Safety & Security* தொடர்பான பயிற்சி

 *அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு*



*School Safety & Security* தொடர்பான பயிற்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும், கீழே உள்ள link - இன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.


https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194


இந்த பயிற்சியை *DIKSHA* -ன் மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே உள்ள link -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


https://youtu.be/OE5aekv5Zk8


*CEO, Virudhunagar.*

Wednesday, 16 December 2020

Tuesday, 15 December 2020

Safety and Security Training - தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்,பட்டத்சரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி!

Safety and Security Training - தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்,பட்டத்சரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி!

கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெற உள்ளது.



Saturday, 12 December 2020

2020-2021 உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்க்க !

 *வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்திக்கோங்க. இந்த இணைப்பில் சரி பார்த்து கொள்ளலாம்*


https://bit.ly/2IHioxG


*உங்க அக்கம் பக்கத்தில் 18 வயது நிரம்பி இருக்கும் தம்பி தங்கைகள் கிட்டயும் சொல்லி பதிவு செய்ய சொல்லுங்க*. இந்த

 https://bit.ly/2Z8lU9J இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனிலேயே எளிமையாக பதிவு செய்யலாம். 


*திருத்தம் செய்ய Nov 21, 22 மற்றும் Dec 12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்*


#2021

#ELECTIONTN

Friday, 11 December 2020

LIC நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை !

LIC நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை !

 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020

 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும். இதை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து நடத்தி வருகிறது.

அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகள் பற்றி அறிந்துகொள்ளப் பள்ளி மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கின்ற மிகப்பெரும் அறிவியல் திருவிழாவாக இது விளங்கி வருகிறது. இந்தப் பேரிடர் காலகட்டத்தில் இந்த ஆண்டு டிசம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை நான்கு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது.

இந்த வருடம் 35க்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த அறிவியல் திருவிழாவில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கிராமம், கட்டுரை எழுதும் போட்டி, செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போட்டி போன்ற நிகழ்வுகளும், பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் கட்டுரைகள் எழுதுதல், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளும், கல்லூரி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிக் கருத்தரங்கு உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகளும் சர்வதேச அறிவியல் திருவிழாவில் நடைபெற உள்ளன.

குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கான ’அறிவியல் கிராமம்’ என்ற நிகழ்வில் 5 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பங்கேற்க முடியும். அதைத் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் போட்டியானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது.

கட்டுரைப் போட்டியின் தலைப்பு: அறிவியல் எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்?

நான்கு பிரிவுகள்

* 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்
(முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000)

* 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள்
(முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)

* இளநிலை/ முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்
(முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)

* ஆய்வுகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள்
(முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)

கட்டுரை 600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

போட்டியில் பங்கேற்க:

1.www.scienceindiafest.org இணையதளத்திற்குச் சென்று IISFஇல் (இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா) உங்கள் பெயரைப் பதிவு செய்யவும்.
2. நிகழ்வுகள் பதிவுப் பக்கத்தில் உங்கள் ஆதாரச் சான்றுகளோடு உள்நுழையவும்.
3. டேஷ்போர்டில், 41 நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் இந்தியாவில் அறிவியல் கல்வியைத் தேர்ந்தெடுத்து உங்கள் கட்டுரையைச் சமர்ப்பிக்கவும்.

கடைசித் தேதி: 15 டிசம்பர் 2020.

அறிவியல் திருவிழாவில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து இணையவழியில் இந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்கலாம். முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், மின் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு: கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்- கலிலியோ அறிவியல் கழகம்
தொடர்புக்கு: 87782 01926

Thursday, 10 December 2020

உங்களுடைய Pay Slipஐ IF HRMS வெப்சைட்டில் சென்று பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்

ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்களுடைய employee ID மற்றும் password reset  செய்து கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய ஐடி பயன்படுத்தி தங்களுடைய ஒவ்வொரு மாத pay slip ம் நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் பிற்காலங்களில் இந்த ஐடி பயன்படுத்தியே உங்களுடைய அனைத்து விதமான விடுப்பு களையும் அலுவலர்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அனைத்து விதமான பணப்பரிவர்த்தனை களுக்கான விண்ணப்பங்களையும் இதுதான் விண்ணப்பிக்கவேண்டும் உங்களுடைய ESRஐ இதில் பார்த்துக் கொள்ளலாம் இதுபோன்ற சூழ்நிலைகள் பிற்காலங்களில் வர இருக்கிறது ஆகவே தங்களுடைய 11 இலக்க ஐடியையும் அதனுடைய பாஸ்வேர்ட்  உங்களுடைய பிறந்த தேதி வெறும் எண்கள் மட்டும் நாள் மாதம் ஆண்டு (DDMM YYYY)பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய Pay Slipஐ IF HRMS  வெப்சைட்டில் சென்று பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்

இந்த pay Slip ZIP fileஆக டவுன்லோட் ஆகும் அதை WINZIP (அ) WIN RAR போன்ற App களை பயன்படுத்தி அதில் உள்ள PDF ஐ Extract செய்து அந்த PDF ஒபன்செய்ய உங்களுடைய பிறந்த தேதியை password ஆக டைப் செய்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம் கீழே ஒரு யூடியூப் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி அதை பயன்படுத்தி கூட நீங்கள் உங்களுடைய e-payslip ஐ டவுன்லோட் செய்து கொலள்ளலாம்.

Wednesday, 9 December 2020

EMIS- இணையதளத்தில் மாணவ மாணவியரின் இரத்தப்பிரிவு சேகரிப்பு

 EMIS- இணையதளத்தில் மாணவ மாணவியரின் இரத்தப்பிரிவு சேகரிப்பு

  



பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் ஒரே பாடத்தில் முடித்திருக்க வேண்டும்.

 பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் ஒரே பாடத்தில் முடித்திருக்க வேண்டும்.

 



👆👆👆👆👆

Tuesday, 8 December 2020

தமிழக அரசுப்பணிக்கு ஆபிஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு காட்டயம்!

 

தமிழக அரசு பணிகளுக்காக தேர்ந்தெடுக்க்ப்படுவோர்களுக்கு  Office Automation எனும் கணினி சான்றிதழ் படிப்பு அவசியம்.

விருதுநகர் மாவட்டத்தின் புதிய முதன்மைக்கல்வி அலுவலர்

 விருதுநகர் மாவட்டத்தின் புதிய முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பாலதண்டாயுதபாணி.



முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்



விருதுநகர் மாவட்டம்- SCOPE முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

 



விருதுநகர் மாவட்டம் ஒருங்கிணந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்  சார்பாக முதுகலை ஆசிரியர்களுக்கான SCOPE ஒரு நாள் பயிற்சி  சிவகாசி கம்மாவர் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 10 பள்ளிகளில் இருந்து இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல்,கணிதம் ஆகிய பாட  முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  

பயிற்சியினை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தொடஙகி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர்  பயிற்சி நோக்கத்தையும் எவ்வாறு மாணவர்களிடம் செயல்திட்டம் கொண்டு செல்ல வேண்டும் என உதவி மாவட்ட திட்ட அலுவலர் (எஸ் எஸ் எ) என விளக்கினார். மாவட்ட உதவித்திட்ட அலுவலர்    ( ஆர்.எம்.எஸ்.ஏ ) கருத்தாளர்களை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அருப்புக்கோட்டை  கல்வி மாவட்ட ஒருஙகினைப்பாளர் மற்றும் திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருஙகிணைப்பாளரும் செய்திருந்தனர்.

Monday, 7 December 2020

விருதுநகர் மாவட்டம் கலாஉத்சவ் நிகழ்ச்சி

 விருதுநகர் மாவட்டம் கலாஉத்சவ் நிகழ்ச்சி முதன்மைக்கல்வி  அலுவலர் அவர்கள் தொடஙகி வைத்தார்.




Sunday, 6 December 2020

SCOPE - மாவட்ட அளவில் விருதுநகர் மாவட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

 Specific Concept Oriented programme ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு-  விருதுநகர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளாரின் செயல்முறைகள் வெளியீடு.



அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் செயல்முறைகள் வெளியீடு.

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி 01-01-2021  நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய- தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயார் செய்தல்- விவரங்களை கோருதல் சார்பு-  பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. DATE 04.12.2020



Saturday, 5 December 2020

2020-21 கல்வி ஆண்டு ஜனவரி- ஜூலை

 

 


வருமான வரி கணக்கிடுதல்

 கவனத்திற்கு:


ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த நிதி ஆண்டில் நமக்கு தோராயமாக எவ்வளவு ஊதியம் வரும் என்பதை கணக்கிட்டு, அதற்கான தோராயமான வருமான வரியையும் கணக்கிட்டு, கீழ்க்கண்ட தேதிக்குள், குறிப்பிடப் பட்டுள்ள சதவீத வரித் தொகையை Advance Tax ஆக கட்ட வேண்டும்.


June 15 - 15%


September 15 - 45%


December 15 - 75 %


March 15 - 100%


கட்டத் தவறினால், வருமான வரி சட்ட எண் 234 b & 234 c இன் படி, e-filing செய்யும் போது, வருமான வரித் துறை இணைய தளம் வட்டியை கணக்கிட்டு காண்பிக்கும்.


இந்த வட்டியை தனியாக செலுத்திய பின்னரே, e-filing செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


வருமான வரியை முன்கூட்டியே திட்டமிட்டு, மேற்கண்ட தேதிக்குள் வரியை ஊதியத்தில் பிடித்தம் செய்வது நல்லது.

Hindu Festivals 2021

 Here's the list of Hindu Festivals 2021


Thu 14 Jan – Pongal

Thu 28 Jan – Thaipusam

Sat 27 Feb – Maasi Magam

Thu 11 Mar - Maha Sivarathri

Sun 28 Mar - Panguni Uthiram

Tue 13 Apr – Ugadhi

Wed 14 Apr - Tamil New Year / Vishu

Wed 21 Apr - Sri Rama Navami

Tue 27 Apr - Chitra Pournami

Tue 25 May - Vaikasi Visakam

Sat Jul 17 - Aadi Begins

Mon 2 Aug – Aadi Perukku

Wed 11 Aug - Aadi Pooram

Mon 16 Aug - Aadi Ends

Fri 20 Aug - Varalakshmi Virudham

Sat 21 Aug – Onam

Sun 22 Aug – Aavani Avittam

Mon 30 Aug - Sri Krishna Jayanti

Fri 10 Sep - Vinayakar Chaturthi

Fri 17 Sep – Puratasi Begins

Thu 7 Oct – Navarathri Begins

Thu 14 Oct – Saraswathy Poojai

Sun 17 Oct – Puratasi Ends

Thu 4 Nov – Deepavali

Thu 4 Nov - Kandha Sashti begins

Tue 9 Nov – Soora Samhaaram

Fri 19 Nov – Thirukaarthigai

Thu 16 Dec – Margazhi Begins

Thu 13 Jan 2022 - Vaikunda Ekadesi

Thursday, 3 December 2020

பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு. !

 பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு. சட்டசபை தேர்தலுக்குப்பின் நடத்த திட்டம்.


புரெவி புயல் காரணமாக நாளை அரசு விடுமுறை

 விருதுநகர்,கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி,இராமநாதபுரம், மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

 


Wednesday, 2 December 2020

ஆசிரியர் பிள்ளைகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு

தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை அறிவிப்பு 

 

இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது

 இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான முன்னுரிமைப் பட்டியல் கோரப்பட்டுள்ளது.






STEM - சர்வதேச கருத்தரங்கு ஆசிரியர்களுக்கு NCERT அழைப்பு

 Teachers can submit their papers

RIE, Bhopal India is organising International Conference on Integration of STEAM in School Education on 26-28 Feb 2021. TA/DA will be provided if it is conducted through offline mode.